பெரும் அதிர்ச்சி.. வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது!

 
சிறுமி கர்ப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பச்சபனட்டி கிராமத்தில் 27 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் விதவை பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

அவர் தனது மனைவியின் நான்கு குழந்தைகளையும் தனது குழந்தைகளாகவே நடத்தினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

ஆம், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், 13 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து மகளிடம் கேட்டுள்ளார். அப்போது, ​​தன்னை வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web