ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும்... நிர்மலாவுக்கு ஒன்னும் தெரியாது... சுப்பிரமணியசாமி விமர்சனம்!
“முட்டாள்தனமான ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும். நிர்மலா சீதாராமனுக்கு ஒன்னுமே தெரியாது” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று சென்னை விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் பத்திரிகையாளர்கள், “நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்த அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக கூறப்படுவது, ராகுல் காந்தி தள்ளியதில் 2 பாஜக எம்பிக்களின் மண்டை உடைந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சுப்பிரமணியன் சுவாமி சிரித்தபடி, “நாட்டில் இப்போது வேலையில்லாத திண்டாட்டம் நிறைய உள்ளது. சீனா நம் நாட்டுக்கு சொந்தமான இடத்தை கைப்பற்றுகிறார்கள். அதுபற்றி யாருமே பேசுறது இல்லை. இது தலைமையின் தோல்வி. நாடாளுமன்றத்தில் அவர் இப்படி பேசினார். இவர் இப்படி பேசினார் என கூறுவதை தடுக்க கட்சியின் தலைவர்கள் தான் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் கட்டுப்பாடு இல்லை. அதுதான் பிரச்சனை’’ என்றார்.
இதையடுத்து “ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “அதெல்லாம் இப்போதைக்கு வராது. கவலைப்படாதீர்கள்’’ என்று பதிலளித்தார்.
இந்த வேளையில் ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வந்தது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, “ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும். முட்டாள்தனமாக கொண்டு வந்து இருக்காங்க. நிர்மலாவுக்கு ஒன்றும் தெரியாது. அதிகாரிகள் எல்லாவற்றையும் முடித்து எழுதி கொடுப்பார்கள். அதை தான் பேசுவார்’’ என்று கூறினார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!