’’என்னை மறந்துட்டு வேற ஒருவனை கல்யாணம் பண்றியா?’’.. பெண் ஆசிரியரை உயிருடன் எரித்து கொலை செய்த காதலன்!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த ஒரு இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். திருமணம் மார்ச் மாதம் நடைபெறவிருந்தது. இதை அறிந்ததும், அவரது முன்னாள் காதலன், இளம்பெண்ணை நேரில் சந்தித்து பள்ளிக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தி பேசினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில்ர், முன்னாள் காதலன் இளம்பெண்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில், இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் முன்னாள் காதலனும் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், இளம்பெண்ணின் உடல் எரிந்த நிலையில் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!