கடும் பனிமூட்டம்.. டிராக்டர் மீது மோதிய பைக்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

 
கர்நாடக விபத்து

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள ஒபலாபுரா கிராமம் அருகே நேற்று காலை ஒரு பெண் உள்பட 3 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடும் பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால், எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் மூன்று பேரை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற  டிராக்டர் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுந்தது. மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோதியதில் மோட்டார் சைக்கிள் டிராக்டரில் சிக்கியது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், துமகுரு மாவட்டம் மதுகிரி தாலுகா குடேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஷாகீர் உசேன் (வயது 18), மம்தாஜ் (38), முகமது ஆசிப் (12) என்பதும், அவர்கள் தாய், மகன் என்பதும் தெரியவந்தது.

ஷாகீர் உசேன் பியூசி முதலாமாண்டும், முகமது ஆசிப் ஆறாம் வகுப்பும் படித்து வந்தனர். 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக துமகுரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web