பத்திரமா இருங்க.... 6 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

 
school rain

 தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்திற்கு அதாவது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நகர்ந்து வந்து டிசம்பர் 23, 24ம் தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்ல இருக்கிறது. இப்படியாக போக்கு காட்டிச் செல்லும் இந்நிகழ்வால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை  மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web