இன்று தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. நவ.19 வரை மழை தொடரும்!
வானிலை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னறிவிப்பின்படி, இன்று நவம்பர் 14ம் தேதி மற்றும் நாளை நவம்பர் 15 தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 16ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம். காரைக்காலிலும் கனமழை ஏற்படும் சாத்தியம் உள்ளது.

நவம்பர் 17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடைவிடாத மழைச்சாரல் ஏற்படும். இவற்றோடு புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 18ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மாநிலம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 19ம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதோடு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை காணப்படும்.
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°C-க்கு அருகிலும், குறைந்தபட்சம் 25–26°C வரை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
