இன்று இரவு வரை தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று இரவு வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு கேரளா கடலோரப் பகுதிகளிலும் இதேபோன்ற சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்து, மழை வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதனால் இன்று தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நாமக்கல், பெரம்பலூர், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம், மக்கள் மழை நேரங்களில் வெளியில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
