தள்ளாடும் தமிழகம்... மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
மது

 தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆர்.சி. வடக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் பாக்கியராஜ் (42). கூலித் தொழிலாளி.

தற்கொலை

இவருக்கு திருமணம் ஆகி அம்சராணி (40) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. மேலும், தினமும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.  

ஆம்புலன்ஸ்

இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் நேற்று காலை வீட்டின் ஒரு அறையில் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web