“சீமானுக்கு எல்லாம் நான் பதில் சொல்றதேயில்லை...” - உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

பெரியார் குறித்து சீமான் பேசியது தொடர்பாக பேசிய உதயநிதி “அவருக்கு நான் பதில் சொல்றதே இல்லை” என்று கூறியுள்ளாளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மைக்காலமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சீமானின் இந்த பேச்சுகளுக்கு திராவிட இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீமானுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான், மீண்டும் மீண்டும் பெரியாரை சீண்டும் வகையில் பேசினார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம், சென்னையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ‘இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.
மேலும், இது பெரியார் மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணு தான் என்று சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, “அவருக்கு நான் பதில் சொல்றதே இல்லை” என்று உடனடியாக சொன்னார் உதயநிதி ஸ்டாலின்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!