’எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்ட’.. தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்தவரை குத்திக் கிழித்த மகன்கள்!

குஜராத்தில் உள்ள காந்திநகரில் வசிக்கும் சகோதரர்கள் சஞ்சய் (27) மற்றும் ஜெயஸ் தாக்கூர் (23). இவர்களது தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர்களது தாய் ரத்தன்ஜி தாக்கூருடன் தொடர்பு வைத்திருந்தார். அது நாளடைவில் காதலாக மாறியது. மகன்களுக்கு இது தெரிந்ததும், அவர்கள் தங்கள் தாயையும் ரத்தன்ஜியையும் பலமுறை கண்டித்தனர்.
ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்துவிட்டு நெருங்கி பழகினர். இதனால் கோபமடைந்த சகோதரர்கள் ரத்தன்ஜியின் வீட்டிற்குச் சென்று கத்தியால் குத்தி, கட்டையால் அடித்தனர். இதனால், அவரது குடல்கள் வெளியே வந்தன, அவர் உயிருக்குப் போராடினார். ஆனால், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், ரத்தன்ஜியின் குடல்களை வெளியே எடுத்து வெளியே எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ரத்தன்ஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!