'நான் தான் எரித்துக் கொன்றேன்' - பாம் சரவணன் பரபரப்பு வாக்குமூலம்!

 
பாம் சரவணன்

ஆந்திர மாநிலத்தில்  ரவுடி பாம் சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை எம்கேபி நகர் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.  அந்த சமயத்தில்  ரவுடி பாம் சரவணன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது  போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர். காலில் குண்டு காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாம் சரவணன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பாம் சரவணன், வலியோடு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க  போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பாம் சரவணன்

இந்த  கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வம் என்பவரை எரித்துக் கொலை செய்ததாக  ரவுடி பாம் சரவணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இவார் தனது நண்பரான வழக்கறிஞர் ராஜேஷ் உடன் சேர்ந்து பன்னீர்செல்வத்தை எரித்து கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  2018 ம் ஆண்டு முதல் பன்னீர்செல்வம் காணாமல்போனதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பாம் சரவணன்

பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே  10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web