’36 வயதாகியும் கல்யாணம் நடக்கல’.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

கோவை பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் பிரகாஷ் (வயது 36). சலூன் கடை நடத்தி வந்த இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இவரது உறவினர்கள் பல இடங்களில் இவருக்கு பெண் தேடினர். ஆனால் திருமணம் தொடர்ந்து தள்ளிப் போனது. இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரகாஷ், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
பின்னர், தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விஷம் குடித்ததாகக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், பிரகாஷை மீட்டு 108 ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!