இ வே பில் முதல் வாட்ஸ் அப் செயல்பாடுகள் நிறுத்தம் வரை ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!

 
ஜனவரி


 
2024 ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில்  ஜனவரி 1, 2025 முதல்  விதி மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  GST இணக்கம் முதல் தொலைத்தொடர்பு, சர்வதேச பயணம் மற்றும் தொழில்நுட்பம் வரை பல்வேறு துறைகளில் இந்த மாற்றங்கள் இந்தியா முழுவதும் குடும்பங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பயணிகளை பாதிக்கலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.   

மொபைல்
இ-வே பில் கட்டுப்பாடுகள்: 
180 நாட்களுக்கு மேல் பழமையான அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே இ-வே பில்களை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
தாய்லாந்து அதன் உலகளாவிய இ-விசா தளமான www.thaievisa.go.th ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இது இந்தியர்கள் உட்பட சர்வதேச பயணிகள் ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கும் .
மேலும் ஜனவரி 1, 2025 முதல், இந்தியாவில் குடியேறாத விசா விண்ணப்பதாரர்கள் கூடுதல் கட்டணம் எதுவுமின்றி  ஒரு முறை தங்கள் அமெரிக்க விசா நியமனங்களை மறுபதிவு செய்யலாம். H-1B விசா செயல்முறையில் ஏற்படும் மாற்றங்கள் விண்ணப்ப முறையை நவீனப்படுத்தலாம்.  முதலாளிகள் மற்றும் இந்திய F-1 விசா வைத்திருப்பவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும். இருப்பினும், B1/B2 விசா நியமனங்களுக்கான காத்திருப்பு நேரம் இன்னும் 400 நாட்களுக்கு மேல் உள்ளது. 
புதிய Right of Way (RoW) விதிமுறைகள் நடைமுறைக்கு வரும், நிலத்தடி தொடர்பு உள்கட்டமைப்பின் நிறுவல் மற்றும் பராமரிப்பை மேம்படுத்தும். ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த விதிகளைப் பயன்படுத்தி தங்கள் சேவைகளை மேம்படுத்த உள்ளன.
 பில்
ஜனவரி 1, 2025 முதல் பல பழைய Android சாதனங்களில் WhatsApp செயல்படுவதை நிறுத்தஇருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  Samsung Galaxy S3, LG Nexus 4, HTC One X மற்றும் Moto G மாடல்கள் அடங்கும். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web