இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,383 பேருக்கு தொற்று

 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,383 பேருக்கு தொற்று

கடந்த 24 மணிநேரத்தில் 41,383 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,12,57,720 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 507 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,18,987 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 38,652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,04,29,339 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,09,394 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டர்வர்களின் எண்ணிக்கை 41,78,51,151 ஆக அதிகரித்துள்ளது

From around the web