இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு தொற்று.. அதிக பட்சமாக கேரளாவில் 15,058 பேர் பாதிப்பு..

 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு தொற்று.. அதிக பட்சமாக கேரளாவில் 15,058 பேர் பாதிப்பு..

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,32,89,579 ஆக உயர்ந்தது.

இதில் கேரளாவில் 15,058 பேர், மகாராஷ்டிராவில் 2,740, தமிழ்நாட்டில் 1,580, கர்நாடகாவில் 673, ஆந்திராவில் 864 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு தொற்று.. அதிக பட்சமாக கேரளாவில் 15,058 பேர் பாதிப்பு..

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 99 பேர் உள்பட நாடு முழுவதும் 339 பேர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 4,43,213 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு தொற்று.. அதிக பட்சமாக கேரளாவில் 15,058 பேர் பாதிப்பு..

கடந்த 24 மணி நேரத்தில் 37,127 பேர் குணமடைந்து பெற்று வீடு திரும்பி உள்ளார். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,24,84,159 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 3,62,207 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று ஒரே நாளில் 78,66,950 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 75,22,38,324 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

From around the web