10 வருடங்களுக்கு கோப்பையை இழந்தது இந்தியா... சிட்னி டெஸ்டில் படுதோல்வி!

 
ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முன்னதாக நடைபெற்ற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தது. 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3வது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. பின்னர் 4வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்

இந்நிலையில் நேற்று முன் தினம் சிட்னியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்

இதன் பின்னர் 4 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 157 ரன்களில் சுருண்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கவாஜா (41 ரன்கள்), டிராவிஸ் ஹெட் (34 ரன்கள்) வெப்ஸ்டர் (39 ரன்கள்) அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். ஆஸ்திரேலியா 27 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 3வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. 10 வருடங்களுக்குப்பின் ஆஸ்திரேலியா பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web