இன்று சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்... குவியும் சுற்றுலாப் பயணிகள்!

தமிழகத்தில் தமிழக அரசு சுற்றுலாத் துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் இன்று 10வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை சுற்றுலாத்துறை, தனியார் அமைப்பும் இணைந்து பொள்ளாச்சியில் நடத்தி வருகின்றனர்.. அமெரிக்கா, பிரேசில், நெதர்லாந்து உட்பட 7 நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து சர்வதேச பலூன் திருவிழாவை கடந்த 9 வருடங்களாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தி வருகின்றது. பலூன் திருவிழா நடத்தப்படும் பொழுது வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்க விடப்படும். பறக்க விடப்படும் பலூன்களை காணவும் அந்த பலூன்களில் ஏறி பயணம் செய்யவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலூன் திருவிழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.. தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து இந்த ஆண்டு 10வது சர்வதேச பலூன் திருவிழாவை நடத்த முடிவு செய்த நிலையில் சென்னை, பொள்ளாச்சி, மற்றும் மதுரை மாவட்டங்களில் நடத்தவும் முடிவு செய்தனர்.
இந்த பலூன் திருவிழாவில் பெல்ஜியம், பிரேசில், இங்கிலாந்து, ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் நாடுகளில் இருந்து பல்வேறு பலூன்கள் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த ஓநாய், யானை, சிறுத்தை, உருவம் கொண்ட பலூன்களும் வெப்ப காற்று பலூன்களும் பறக்க விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!