ஐபிஎல் டிரெய்னர் ரவி சாஸ்திரி?!!

 
ஐபிஎல் டிரெய்னர் ரவி சாஸ்திரி?!!


ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல் போட்டிகளில் அடுத்த ஆண்டு முதல் 2 புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டிரெய்னர் ரவி சாஸ்திரி?!!

இதில் சஞ்சீவ் கோயங்கா குழுமம் 7,090 கோடிக்கு லக்னோ அணியையும், சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் 5,625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளது. இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


ஏற்கனவே இருக்கும் 8 ஐபிஎல் அணிகள் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா 2 உள்,வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும்.
இந்நிலையில் புதிய அணிகள், யார் யாரை தக்கவைத்து கொள்ளலாம் என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஐபிஎல் டிரெய்னர் ரவி சாஸ்திரி?!!

அகமதாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பௌலிங் கோச்சாக பரத் அருண், பீல்டிங் கோச்சாக ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் வெளியாகலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web