நெடுஞ்சாலையில் விழுந்த இரும்பு தகடு.. அடுத்தடுத்து பஞ்சாரான 50க்கும் மேற்பட்ட வாகனங்கள்!

 
சம்ரித்தி நெடுஞ்சாலை

மும்பை மற்றும் நாக்பூரை இணைக்கும் சம்ரித்தி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், டிசம்பர் 29ம் தேதி இரவு 10 மணியளவில் வாஷிம் மாவட்டம் மாலேகான் மற்றும் வனோஜா டோல் நாகா பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது சாலையில் இரும்பு தகடு விழுந்ததில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பஞ்சராயின. அதாவது இரும்புத் தகடு மீது வாகனம் ஏறியதால் விபத்து ஏற்பட்டது. பல வாகனங்களின் டயர்களை உடைத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு வரும் வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், நீண்ட நேரமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காததால், இரவு முழுவதும் பயணிகள் நெடுஞ்சாலையில் தவித்தனர். தகடு தவறி விழுந்ததா அல்லது வேண்டுமென்றே வீசப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மறுபுறம் இந்த சாலையில் அதிக விபத்துகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம், கட்வாஞ்சி கிராமத்திற்கு அருகிலுள்ள சம்ரிதி மஹாமார்க் என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

சம்ரிதி மஹாமார்க் என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு ஆறு வழி நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 701 கி.மீ. மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான மும்பை மற்றும் நாக்பூரை இணைக்கும் நாட்டிலேயே மிக நீளமான கிரீன்ஃபீல்ட் சாலை திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.  இந்த சாலை 55,000 கோடி செலவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web