மெட்ரோ நிறுவனத்திடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் அபேஸ்.. இளைஞர் அதிரடியாக கைது!

சென்னை மெட்ரோ ரயில் கழக அலுவலகம் கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளங்களை அமைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர் அருகே வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் சில திருடப்பட்டதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் அலுவலக உதவி பொறியாளர் ஆகாஷ்ராஜ், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மடிப்பாக்கம் வண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பவர் இரும்பு கம்பிகளைத் திருடியது தெரியவந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பணம் மற்றும் பூஜை பொருட்களை அவர் திருடியதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ இரும்பு கம்பிகள், 1 உண்டியல் மற்றும் பூஜை பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!