கணவன் வேலை கருணை அடிப்படையில் மனைவிக்கா? மாமியாருக்கா? உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தனது வேலையை கருணை அடிப்படையில் தனது மாமியாருக்கு வழங்க வேண்டும் என்று கணவன் கூறியிருந்த நிலையில், அவரது வேலையை மனைவிக்கு வழங்கும்படி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் வனத்துறையில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் கிஷண் சிங் தபோலா. இவர் கடந்த 2020ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் உயிருக்குப் போராடியபடி சிகிச்சைப் பெற்று வந்த கிஷண் சிங், தான் உயிரிழப்பதற்கு முன், தன்னுடைய மரணத்துக்குப் பின், கருணை அடிப்படையில் தன்னுடைய வேலையை மாமியாருக்கு வழங்க வேண்டும் என அவர் முன்மொழிந்திருந்தார். அதன்படி வனத்துறை தபோலாவின் மாமியாருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வனத்துறை முடிவு செய்தது. இதற்கு எதிராக தபோலாவின் மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின் போது, நீதிபதி “மாமியாருக்கு பணி வழங்க முடிவு எதற்காக எடுக்கப்பட்டது?” எனக் கேட்டார். இதற்கு வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தபோலா மற்றும் அவரது மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், அவர் மாமியாரின் பெயரை முன்மொழிந்திருந்தார்” என தெரிவித்தார்.
ஆனால் அரசு தரப்பிலான ஆவணங்களின் படி தபோலாவின் மரணத்துக்குப் பின் கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களும் அவரது மனைவிக்கே வழங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “தபோலாவின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து மூன்று மாதங்களுக்குள் பரிசீலித்து தீர்மானிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
