இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.. காசாவில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்த சோகம்!
காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாத தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக்கைதிகளாக காசா பகுதிக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் மீது போர் தொடுத்த இஸ்ரேல், 117 பணயக்கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் 101 இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காஸாவில் நடந்த போரில் ஹமாஸ் போராளிகள் உட்பட 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர்.
இறந்தவர்களில் காசா காவல்துறையின் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் மஹ்மூத் சலா மற்றும் அவரது துணை பிரிகேடியர் ஹொசாம் ஷவான் ஆகியோர் அடங்குவர் என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!