கொரோனாவிற்கு மூக்கில் எலுமிச்சை சாறு விட்டதால் உயிரிழந்த பரிதாபம்!

 
கொரோனாவிற்கு  மூக்கில் எலுமிச்சை சாறு விட்டதால் உயிரிழந்த பரிதாபம்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதை விட அதிகமாக வதந்திகளும் பரவி வருகின்றன. அதில் ஒன்று தான் மூக்கில் எலுமிச்சை சாறு விட்டால் கொரோனா தொற்று சரியாகி விடும் என்பது.

அந்த வகையில் கர்நாடகா பாஜக முன்னாள் எம்.பியும், தொழிலதிபருமான விஜய் சங்கேஷ்வர் மூக்கில் எலுமிச்சை சாறு ஊற்றினால் கொரோனா சரியாகி விடும் என வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கொரோனாவிற்கு  மூக்கில் எலுமிச்சை சாறு விட்டதால் உயிரிழந்த பரிதாபம்!

அதை செய்தும் பார்த்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். தற்போது இதே வதந்தியை நம்பி இன்னொருவரும் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிந்தானூரை சேர்ந்தவர் பசவராஜ். இவருக்கு வயது45. இவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டிருக்கிறார்.

கொரோனாவிற்கு  மூக்கில் எலுமிச்சை சாறு விட்டதால் உயிரிழந்த பரிதாபம்!

உடனே வாந்தி எடுத்த பசவராஜ் அடுத்த கணமே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இது போன்ற வதந்திகளை நம்பி உயிரை பறிக்கொடுக்க வேண்டாம் என மருத்துவ வல்லுனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

From around the web