ஆவி பிடிக்கும் போது மயக்கமடைந்த சிறுமி உயிரிழந்த பரிதாபம்!

 
ஆவி பிடிக்கும் போது மயக்கமடைந்த சிறுமி உயிரிழந்த பரிதாபம்!

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள குமாரப் பெருமாள் விளையில் வசித்து வருபவர் சாம்பெனடிக். இவரது மகள் அக்சயா ஜென்சி. இவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அக்சயா ஜென்சிக்கு ஆஸ்துமா பிரச்சனை சிறுவயதில் இருந்தே உண்டு.

ஆவி பிடிக்கும் போது மயக்கமடைந்த சிறுமி உயிரிழந்த பரிதாபம்!

இதனால் இவர் அடிக்கடி ஆவி பிடிப்பது வழக்கம். அதே போல் ஆஸ்துமா நோய்க்கு அவருடைய பெற்றோர்கள் அக்சயாவை ஆவி பிடிக்க வற்புறுத்தியுள்ளனர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மாணவி மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை அருகில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

அவரை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web