ஜெய்ப்பூர் தீ விபத்து... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... 8 மணிநேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்!
ஜெய்ப்பூர் பெட்ரோல் பங்க் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 8 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். சுமார் 10 கி.மீ. தொலைவு வரை வெடிசத்தம் கேட்டதாக மக்கள் கூறினர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது சிகிச்சைப் பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பெட்ரோல் பம்பில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!