உலக இரட்சகர் இயேசு பிறந்தார்... தேவாலயங்களில் விடிய விடிய பிரார்த்தனை.. குவிந்த மக்கள்!
உலக இரட்சகர் இயேசு பிறந்தார். உலகம் முழுவதும் கோலாகலமாக கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். விடிய விடிய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை முதலே தேவாலயங்களில் பிரார்த்தனைகளும், பாடல்களும் நடைபெற்று வருகிறது. விடிய விடிய தேவாலயங்களில் கூட்டு திருபலியும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு கருதியும், கொண்டாட்டங்களின் போது வரம்பு மீறாமல் இருப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் சென்னையில் மட்டுமே சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். அன்பை விதைப்போம். சக உயிர்களிடத்தில் அன்பை போதிப்போம். தம் உயிர் போல் அனைவரையும் நேசிப்போம் என்கிற இயேசுவின் அடிப்படை போதனையை மறக்காமல் அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!