இயேசு பிறந்தார்... இன்று 5வது மெழுகுவர்த்தி ஏன் ஏற்றி வழிபடுகிறோம் தெரியுமா?

 
மெழுகுவர்த்தி கிறிஸ்துமஸ் இயேசு
உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து பிறந்தார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை வெகுவிமரிசையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். மக்களின் மனதில் இருந்த இருளை அகற்ற உதித்த பேரொளி தான் கிறிஸ்துமஸ் பண்டிகையின் நோக்கம்.

கிறிஸ்துமஸ் சில சுவாரசிய தகவல்கள்!

பெத்லகேம் எனும் சின்னஞ்சிறு ஊரில் மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக பிறந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் வாழ்ந்த காலத்தில் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். அவரின் பிறப்பைக் கொண்டாடுவதால் மக்களின் மனதில் உறுதியான நம்பிக்கை ஏற்படும்.கிறிஸ்துமஸ் விழா நமக்குச் சொல்லும் செய்தி, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு ஆகியவையே.

கிறிஸ்துமஸ் சில சுவாரசிய தகவல்கள்!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அன்பின் விழா என்பதை உணர்த்த முதல் வாரத்தில் கருநீல நிறத்தில் ஒரு மெழுகுவர்த்தியும், கிறிஸ்துவின் பிறந்தநாள் நம்பிக்கையின் விழா என்பதை உணர்த்த 2ம் வாரத்தில் மீண்டும் ஒரு கருநீல மெழுகுவர்த்தியும், மகிழ்ச்சியை கொண்டாட 3ம் வாரத்தில் இளஞ்சிகப்பு நிற மெழுகுவர்த்தியும், எதிர்நோக்கினை வெளிக்காட்ட 4 வது வாரத்தில் மீண்டும் கருநீல நிற மெழுகுவர்த்தி என கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு 4 வாரங்களில் இந்த நான்கு வகையான மெழுகுவார்த்திகள் தேவாலயங்களில் ஏற்றப்படுவது வழக்கம்.

இன்று கிறிஸ்துவின் பிறந்த நாளில் 5வதாக வெள்ளை நிறத்தில் ஒரு மெழுகுவர்த்தியை தேவாலயத்தில் ஏற்றி வழிபடுகிறோம் என்பது தான் வழிபாட்டு முறை. இதன் காரணமாகவே கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்காக 4 வாரங்களான ஜெபத்தின் போது 4 மெழுகுவர்த்திகளையும், இன்று தேவாலயத்தில் 5வது மெழுகுவர்த்தியையும் ஏற்றுகிறோம்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web