விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை ... மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

 
கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் விவசாயியின் வீட்டில் நகை, பணம் மற்றும் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எட்டயபுரம் சண்முகவேல்நகர் அலங்காரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (56) என்பவர் விவசாயி. அவருக்கு விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தத்தில் விவசாய நிலம் உள்ளது. கடந்த 26ஆம் தேதி, அவர் தனது எட்டயபுரம் வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்திற்கு விவசாய பணிக்காக சென்றார்.

நகை பணம்

அந்த நேரத்தில் மர்மநபர்கள் அவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 5.5 சவரன் நகைகள், ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். பின்னர், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் வீடு திறந்து கிடந்ததை கண்டு சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக எட்டயபுரம் வந்து போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். டி.எஸ்.பி. அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். கைரேகை நிபுணர்கள் மர்மநபர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

போலீஸ்

மேலும், அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், கடந்த 26ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மர்மநபர்கள் கோவில்பட்டி–தூத்துக்குடி பிரதானச் சாலையில் காரை ஓட்டிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தகவலின் அடிப்படையில், மர்மநபர்களை பிடிக்க எட்டயபுரம் போலீசார் தீவிர வலைவீச்சு நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!