முன்பதிவு செய்துட்டீங்களா? கும்பமேளா சிறப்பு ரயில்கள் இயக்கம்... தெற்கு ரயில்வே அறிவிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கும்பமேளாவை முன்னிட்டு சென்னை, மங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ”உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறவுள்ள கும்பமேளாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோம்தி நகருக்கு ஜனவரி 18, பிப்ரவரி 5, மாா்ச் 1 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
மறுமாா்க்கமாக கோம்தி நகரில் இருந்து ஜனவரி 21, பிப்ரவரி 18, மாா்ச் 4 தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06072) இயக்கப்படும். இதில் ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் 10, படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், ஜபல்பூா், பிரயாக்ராஜ் சியோகி, மிா்சாபூா், வாரணாசி, அயோத்தி வழியாக கோம்தி நகா் வரை இயக்கப்படும்.
மங்களூரில் இருந்து வாரணாசிக்கு ஜனவரி 18, 15 தேதிகளிலும், மறுமாா்க்கமாக வாரணாசியில் இருந்து ஜனவரி 21, பிப்ரவரி 18 தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண்: 06019/06020) இயக்கப்படும். இதில் ஏசி வகுப்பு பெட்டிகள் 4, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!