பெண்களே உஷார்... தோஷம் கழிப்பதாக கூறி 33 சவரன் நகைகள் திருட்டு... அதிர வைத்த பெண் மந்திரவாதி!

பெண்களே உஷாராக இருங்க. யாரையும் அத்தனை சீக்கிரத்தில் நம்பிடாதீங்க. தோஷம் கழிப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் மந்திரவாதியைப் போலீசார் கைது செய்து, 33 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்ததனர்.
குமரி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் தோஷம் கழிப்பதாக கூறிவிட்டு அங்குள்ள மூதாட்டி மற்றும் பெண்களிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை திருடிய வழக்கில் போலி பெண் மந்திரவாதி கிரிஜா(54) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவரை குமரி மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை, கவளகுளம் பகுதியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 33 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!