உஷார்!! அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

 
உஷார்!! அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், டெல்லியில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ச்சியாக 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்துள்ளது.

இதனால் டெல்லியின் பிரகதி மைதான், லஜ்பத் நகர் மற்றும் ஜங்புரா பகுதிகள், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளிலும் கன மழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகள் மூடப்பட்டன.

உஷார்!! அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்லியின் சில இடங்களிலும் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள சில பகுதிகளிலும், உத்தர பிரதேசத்தின் தவுராலா, சப்ரவுலா, பாக்பத், கேக்ரா, அனூப்சாஹர், ஷிகார்பூர், பகசு, தேபை, நரோரா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்து உள்ளது.

From around the web