லாரி மோதி சிங்கம் துடிதுடித்து பலி... பெரும் சோகம்!

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் தேவலியா கிராமம் அமைந்துள்ளது. அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் ஏப்ரல் 24ம் தேதி அதிகாலையில் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயற்சி செய்த பெண் சிங்கத்தை கவனிக்காமல் ஓட்டுனர் வேகமாக லாரியை இயக்கி சிங்கத்தின் மீது மோதினார்.
இதனால் விபத்தில் சிக்கிய பெண் சிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் மூலம் லாரி ஓட்டுனரை அடையாளம் கண்டறிந்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் வனவிலங்கு திருத்தச் சட்டம் 2022 ஆகியவற்றின் கீழ் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த தாக்குதல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!