7 வது முறையாக பெலாரஸின் அதிபராகும் லுகாஷென்கோ?

 
லுகாஷென்கோ


 
பெலாரஸ் நாட்டில் அதிபர் தேர்தல் இந்த வார கடைசியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என அழைக்கப்படும் இவர் 7 வது முறையாக இம்முறையும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்  பெலாரஸ் நாட்டை  1994  முதல் சர்வாதிகாரி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ஆட்சி செய்து வருகிறார்.  கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் லுகாஷென்கோ 80 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது, அந்த தேர்தலில் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டு மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.

லுகாஷென்கோ


அந்த போராட்டத்தை லுகாஷென்கோ இரும்புக் கரங்களைக்கொண்டு அடக்கினார்.அத்துடன்  போராட்டத்தில் கலந்து கொண்ட  ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டதுடன், லுகாஷென்கோவின் முக்கிய எதிர் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் நாடு கடத்தப்பட்டது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

லுகாஷென்கோ


இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் லுகாஷென்கோவை எதிர்க்க முக்கிய அரசியவாதிகள் யாரும் இல்லாததினால் அவரே மீண்டும் அதிபராக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  2024 ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலை மக்கள் போராட்டத்திற்கு பயந்து 2025 ஜனவரிக்கு லுகாஷென்கோ தள்ளி வைத்தார். ஏனெனில், தற்போது அங்கு பனிக்காலம் தொடங்கியுள்ளதால்  கடும் குளிரில் மக்களால் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முடியாது. இதனால் தான் தற்போது அதிபர் தேர்தல் நடத்தப்படுவது  குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பெலாரஸின் பெரும்பான்மையான மக்கள் இந்த தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web