நாளை மாநாடு ரிலீஸ் ஆகாது!! தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்!!

 
நாளை மாநாடு ரிலீஸ் ஆகாது!! தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்!!


தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிம்பு . தற்போது இவரின் மாநாடு படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த படம் நாளை ரிலீஸாக இருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாளை மாநாடு ரிலீஸ் ஆகாது!! தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்!!

முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப் பட்டிருந்தது.திரையரங்குகள் கிடைக்கவில்லை இதனால் நவம்பர் 25ல் ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

நாளை மாநாடு ரிலீஸ் ஆகாது!! தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்!!

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாநாடு நிறைய கனவுகளோடு படைக்கப்பட்டது. தவிர்க்க இயலாத காரணங்களால் மீண்டும்’மாநாடு’ வெளியீடு தள்ளி போனதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்களுக்கு எனது வருத்தங்கள். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web