சென்னை உயர் நீதிமன்றம் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை மறுப்பு!

 
மினி பஸ்
 

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ளது. கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை 2025 ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தனியார் பஸ் ஆப்ரேட்டர்கள் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி, புதிய மினி பஸ் திட்டம் அவர்களது தொழிலை பாதிக்காது எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

மினி பேருந்து

இதற்கு எதிராக தனியார் பஸ் ஆப்ரேட்டர்கள் மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். விசாரணையில் மனுதாரர்கள், மினி பஸ் திட்டம் அவர்களது தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 1,350 பேருந்துகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதால் விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மினி பஸ்

நீதிபதிகள், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்ததும், பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறி விசாரணையை 2025 ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!