மதுரையில் பேக்கரி விவகாரத்தில் சிக்கியவர் கட்சியிலிருந்து நீக்கம்! திமுக அதிரடி!

 
மதுரையில் பேக்கரி விவகாரத்தில் சிக்கியவர் கட்சியிலிருந்து நீக்கம்! திமுக அதிரடி!


மதுரை வாடிப்பட்டி பகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த பேக்கரியை திமுக துணை மாணவரணி செயலாளர் பிரகாசம் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது . தேர்தல் முன்பகை காரணமாக இந்த தாக்கதல் நடைபெற்றதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கையில் ஆயுதங்களுடன் பேக்கரியில் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மதுரையில் பேக்கரி விவகாரத்தில் சிக்கியவர் கட்சியிலிருந்து நீக்கம்! திமுக அதிரடி!

அத்துடன் பேக்கரியில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசி சேதப்படுத்தியுள்ளனர். பேக்கரி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புகார் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்ட அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது காவல்துறை.

மதுரையில் பேக்கரி விவகாரத்தில் சிக்கியவர் கட்சியிலிருந்து நீக்கம்! திமுக அதிரடி!


இந்த பேக்கரி விவகாரத்தில் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி போரூர் செயலாளர் பிரகாசம் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து இது குறித்து திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

From around the web