குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

 
குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!


மத்தியப் பிரதேசத்தில் வசித்து வரும் எண்ணெய் வியாபாரி பிரிஜேஷ் ராவத் . இவர் குழந்தைகளை கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 2019ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகளான ஷிரேயான்ஷ், பிரியான்ஷ் இவர்களை சித்ரகூட்டில் உள்ள பள்ளியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

குழந்தைகளைக் கடத்திச் சென்ற பிறகு ரூ.1,00,00,000/- பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பெற்றோர்கள் குற்றவாளிகளுக்கு ரூ.20,00,000/-கொடுத்த நிலையில், குழந்தைகளைக் கொலை செய்தனர். அதன் பிறகு யமுனா நதியில் உடல்களை வீசினர்.

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்த புகாரின் அடிப்படையில் ராஜு என்ற ராகேஷ் திவேதி, லக்கி சிங் தோமர், ரோஹித் திவேதி மற்றும் ராம்கேஷ் யாதவ்,ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிண்டோ யாதவ் மற்றும் சித்ரகூட்டில் உள்ள நயாகானில் வசிக்கும் பத்ம் சுக்லா ஆகியோர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ராம்கேஷ் யாதவ் முக்கியக் குற்றவாளி. இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2019 மே மாதம் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 ஆயுள் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் மரணம் அடையும் வரை நான்கு முறை ஆயுள் தண்டனைகளும், ரூ.1,70,00,00/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடத்தல், கிரிமினல் சதி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

From around the web