மங்களூரு வங்கி கொள்ளை விவகாரம்.. குற்றவாளியின் வீட்டில் 18 கிலோ தங்கம் பறிமுதல்!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் கடந்த 17 ஆம் தேதி முகமூடி அணிந்த சிலர் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். இது குறித்து மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கேரளா வழியாக தமிழகத்தின் நெல்லை மாவட்டத்திற்குள் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மங்களூரு சிறப்பு அதிரடிப்படை போலீசார், நெல்லை மாவட்டம் அம்பையில் முருகாண்டி மற்றும் ஜோசுவா ஆகிய இருவரை கடந்த 21 ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, இருவரும் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நெல்லை மாவட்டம் பத்மனேரியில் உள்ள முருகாண்டியின் வீட்டில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சோதனை நடத்தி சுமார் 18 கிலோ தங்க நகைகளை மீட்டனர். முருகாண்டியுடன் தொடர்புடைய இடங்களில் போலீசார் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மங்களூரு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!