சிறைச்சாலையில் திடீர் தீ விபத்து! 41 பேர் பலி!

 
சிறைச்சாலையில் திடீர் தீ விபத்து! 41 பேர் பலி!

இந்தோனேசியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இன்று எதிர்பாராத நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர்.

சிறைச்சாலையில் திடீர் தீ விபத்து! 41 பேர் பலி!

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில், தங்கெராங்க சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகும் குற்றவாளிகளை அடைத்து வைத்திருந்தனர். பயங்கர கட்டுக்காவல் உள்ள இந்த சிறைச்சாலையில் இன்று திடீரென மின்கசிவால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து நடைப்பெற்ற சிறைச்சாலை கட்டிடத்தில் சுமார் 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருமே போதைக் குற்ற வழக்குகளில் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

சிறைச்சாலையில் திடீர் தீ விபத்து! 41 பேர் பலி!

எனினும், அதற்கு தீ பெரும் பகுதிகளில் பரவியிருந்ததால், கைதிகள் உள்பட 41 பேர் தீ விபத்தில் பலியானார்கள். படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைச்சாலையில் இருந்த மற்ற கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web