தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!

 
தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 3வது அலை அச்சம் காரணமாகவும், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!

அந்த வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 40000 மையங்களில் 24 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதனை மேலும் தீவிரப்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!


அதன்படி செப்டம்பர் 17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும், இதில் கையிருப்பில் உள்ள 17 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரக்கூடும் எனவும் மக்களின் தேவைகளை பொறுத்து அதிக அளவு தடுப்பூசிகள் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

From around the web