இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை
 

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, இன்று (05-11-2025) காலை 10 மணி வரை மாநிலத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மார் கடலோரப்பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்று வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் மியான்மார் நகரக்கூடும் எனவும், பங்களாதேஷ் கடற்கரை அருகே உள்ள மத்தியமேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரி விடுமுறை மாணவிகள் மழை

இதன் தாக்கமாக இன்று வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 26-27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!