அடுத்த 7 நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை !

 
school rain
 

 

தமிழகத்தின் வானிலை நிலவரப்படி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இன்று (நவம்பர் 13) தமிழகத்தின் பல்வேறு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் எனவும், 16 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 17 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரி விடுமுறை மாணவிகள் மழை

நவம்பர் 18 அன்று தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் எனவும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 19 அன்று மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!