இ-சேவை மையத்தில் கொட்டிய பணம்... ரூ.4 கோடி மோசடி செய்த இளம்பெண் கைது!

 
கார்த்திகா

முதியோர் உதவித்தொகை, அரசு வேலை, வங்கி கடன் போன்றவைகளை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ.4 கோடி வரை மோசடி செய்த பெண்ணை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி கார்த்திகா (33). இவர் அந்த பகுதியில் தனியார் இ-சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் பல்வேறு அரசு திட்டங்களுக்காக இ-சேவை மையத்திற்கு பொதுமக்கள் வந்து சென்ற நிலையில், இ-சேவை மையத்துக்கு வந்தவர்களிடம் அரசு வேலை, முதியோர் உதவித்தொகை, அரசு நலத்திட்டங்களின் பலன்களைப் பெற்றுத் தருவதாக கூறி 30க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. 

இ சேவை மையம்

இந்த புகாரின் பேரில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இ-சேவை மையத்துக்கு 'சீல்' வைத்தனர். புகார் கூறப்பட்டுதும் கார்த்திகா தலைமறைவான நிலையில், கார்த்திகாவைத் தேடி வந்த போலீசார் நேற்று சென்னையில் தலைமறைவாக இருந்த கார்த்திகாவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

இ.சேவை மையம்

இதனைத் தொடர்ந்து கார்த்திகா நடத்தி வந்த இ-சேவை மையத்திலும், அவரது வீட்டிலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், தாசில்தார் செல்வி மற்றும் வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க் மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web