சூப்பர் நியூஸ்! தமிழகத்திற்கு இன்று கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

 
சூப்பர் நியூஸ்! தமிழகத்திற்கு இன்று கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. தளர்வில்லாத ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சூப்பர் நியூஸ்! தமிழகத்திற்கு இன்று கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

இந்நிலையில் மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து இலவசமாக மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு முன்பே தமிழக அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆர்டர் செய்திருந்த நிலையில் அவை இன்று தமிழகம் வர உள்ளன. ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.

சூப்பர் நியூஸ்! தமிழகத்திற்கு இன்று கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

இந்த மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. இன்று 63,370 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், நாளை 40,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web