ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் நகை , பணம் கொள்ளை! போலீசார் விசாரணை!

 
ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் நகை , பணம் கொள்ளை! போலீசார் விசாரணை!


தஞ்சாவூர் மாவடம் பூதலூர் வீரமரசன்பேட்டை கிராமத்தில் காலனி தெருவில் வசித்து வருபவர் ராஜீவ்காந்தி. விவசாயியான இவருக்கு வயது 35. ராஜீவ் காந்தி தூங்கிக் கொண்டிருந்த போது இவருடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.12,500/- ரொக்கப்பணம், 2 கிராம் தாயத்து, வெள்ளிக் கொலுசுகளை திருடிச் சென்றனர்.

ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் நகை , பணம் கொள்ளை! போலீசார் விசாரணை!


இவருடைய வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் கந்தர்வகோட்டையை சேர்ந்த விஜயகுமார். இவருக்கு வயது 32. இவர் தூங்கி கொண்டிருந்த போது அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலி, 2 பவுன் கை சங்கிலி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜீவ்காந்தி, விஜயகுமார் இருவரும் பூதலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஒரே தெருவில் 2 வீடுகளில் திருட்டு நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web