விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு !! அமைச்சர் உறுதி!!

 
விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு !! அமைச்சர்  உறுதி!!

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார்.

விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு !! அமைச்சர்  உறுதி!!

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். அங்கு அவர் 2 கோடி ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு பேட்டரியால் நகரும் நாற்காலி, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு கான்கீரிட் வீடுகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பின் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் இனி ரேஷன் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்கப்படும். அந்த வகையில் இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு !! அமைச்சர்  உறுதி!!

மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை நெல்லுக்கான ஆதார விலை ரூ.1,960-லிருந்து, ரூ. 2,060 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட மூன்று லட்சம் டன் கூடுதலாக குறுவை சாகுபடி நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 800 மெட்ரிக் டன் நெல் அரைக்கின்ற வகையில் அரிசி ஆலை நிறுவப்படும் என்று கூறியுள்ளார்.

From around the web