புத்தாண்டு கொண்டாட்டம்... இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

 
இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!
இன்றுடன் 2024 விடைபெற உள்ள நிலையில், புது வருட கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு விடுமுறைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக இன்று டிசம்பர் 31ம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட பலவகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!

இந்நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “வண்டலூர் உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காகப் பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை தினங்கள் என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.

அதிர்ச்சி! வண்டலூர் பூங்காவில் 16 வயதான பீஷ்மர் வெள்ளை புலி உயிரிழப்பு!

இந்த நிலையில் இன்று டிசம்பர் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதாலும், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் வருகைக்காகத் திறந்திருக்கும்” என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web