தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... +1 மாணவி பலாத்காரம்... ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர்!

 
மாணவி கடத்தல் காணவில்லை

தமிழகத்தில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை, ஐஐடி சம்பவம், புதுவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தஞ்சையில் மாணவி கூட்டு பலாத்காரம் என்று அதிகரித்து வரும் நிலையில், கன்னியாகுமரியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி, குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்துக் கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிர செய்திருக்கிறார் வாலிபர். 

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள காரங்காடு புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜின். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினர் தற்போது பேயன்குழியில் வசித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் ஷாஜினுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு மாணவி பிளஸ்-1 படிக்கும் போது ஷாஜின் மாணவியிடம் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு மாணவி தனது கையில் கிடந்த தங்க மோதிரத்தை கழற்றி ஷாஜினிடம் கொடுத்துள்ளார். அந்த மோதிரத்தை ஷாஜின் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் பல மாதங்களாக மோதிரத்தை மாணவிக்கு திருப்பி தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் மோதிரத்தை அந்த மாணவி ஷாஜினிடம் கேட்ட போது, ‘மோதிரம் வீட்டில் இருக்கிறது வா தருகிறேன்’ என்று கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் மாணவியுடன் இருந்ததை ஷாஜின் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டார். தொடர்ந்து அந்த மாணவியிடம் அவர் எடுத்த ஆபாச படத்தைக் காண்பித்து அவ்வப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடைசியாக மாணவியிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். பணத்தை தரவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.

நிர்வாணமாக வீடியோ கால் வரச்சொல்லி மிரட்டல்- அடுத்து மாணவி செய்த காரியம்..!!

இதற்கிடையே அந்த மாணவி ஆடை மாற்றும் படத்தை சமூக வலைதளத்தில் ஷாஜின் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து தனது பெற்றோரிடம் இது குறித்து அழுதபடியே கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஷாஜினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web