எனக்கு நவம்பர் 25 தான் தீபாவளி! மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா !

 
எனக்கு நவம்பர் 25 தான் தீபாவளி! மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா !

சிம்புவின் அட்டகாசமான நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் எனப் பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. யுவனின் இசையமைப்பில் உருவான இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

எனக்கு நவம்பர் 25 தான் தீபாவளி! மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா !


இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் முழுமையாக முடிந்துவிட்டன. தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது நவம்பர் 25ல் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மாநாடு’ படத்தின் டப்பிங் பணிகள் முழுவதையும் சில நாட்களிலேயே முடித்து கொடுத்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா.


இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அருமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ‘மாநாடு’ படத்தில் 8 நாட்களில் முடிக்க வேண்டிய டப்பிங்கை 5 நாட்களில் முடித்து கொடுத்தேன். நாடி, நரம்பு, கழுத்து, முதுகுத் தண்டு, என் தொண்டை என அனைத்தும் உடைந்தது போல் ஆகிவிட்டது.


குறைந்தது 10 நாட்களாவது ஓய்வு தேவை .கடுமையான வேலை, அவ்வளவு வலி. ஆனால், படத்தைப் பார்த்ததும் எனக்கு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான் இருந்தது. உனக்கு நவம்பர் 25 தான்டா தீபாவளி”. என்பது தான் அது.

From around the web