ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமாக நிறைவு!

 
ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமாக நிறைவு!


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் 32வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக பார்வையாளர்கள் அனுமதியின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. 206 நாடுகளில் இருந்து 11000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமாக நிறைவு!


கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறின. எனினும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்திய அணி பங்கேற்ற கடைசி நாளில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது. இன்று மட்டும் அமெரிக்கா 3 தங்கம் வென்றது.


அடுத்ததாக 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்தது. போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி உள்ளது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.

From around the web